Monday, February 15, 2010
அடைக்கலம் காத்தாள் அம்மன் ஆலயம்
அருள்மிகு அடைக்கலம் காத்தாள் அம்மன்கோயில் ஊரின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. அடைக்கலம் காத்தாள் அம்மன் தானாக உருவாகி வளர்ந்தவள் என்று எங்கள் தாத்தா பாட்டிகள் சொல்லக் கேட்டிருக்கிறோம். முன்பொரு காலத்தில் புஞ்சை நிலமாக ஆலயம் அமைந்திருந்த இடம் இருந்திருக்கிறது. அப்போது இங்கே ஒரு அம்மாவும் ஆச்சியும் புல்வெட்டிக் கொண்டிருந்தராம்.
திடீரென தரையில் இருந்து இரத்தமாக வந்துகொண்டிருந்ததாம். இரத்தம் வந்த இடத்தில் அம்மன் இருந்தாள் என்றும்... பின்பு அம்மனை வழிபட ஆரம்பித்தபோது அம்மன் தானாக வளர்ந்து வந்தாள் என்றும் கூறுகின்றனர்.
இன்றும் அம்மன் வளர்ந்துகொண்டிருக்கிறாள் என்பது எங்களின் நம்பிக்கை.
ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் அம்மன் ஆலய கொடைவிழா கோலாகலமாக மூன்று நாட்கள் நடைபெறும். கொடைவிழாவின் போது ஊர் மக்கள் மூன்று நாட்களும் அம்மனிடம் தங்கடம் கேட்பார்கள். தவிர கரகாட்டம், வில்லுப்பாட்டு, மேளம் என மூன்று நாட்களும் கொடைவிழா சிறப்பாக நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment